திருவாரூர் நகராட்சியின் 7-வது மற்றும் 8-வது வார்டுகளை உள்ளடக்கிய கொடிக்கால்பாளையம் பகுதியில், மேலத்தெரு, தெற்குத் தெரு, கடைவீதி, நடுத்தெரு மற்றும் வடக்குத் தெரு ஆகிய இடங்களில் இன்று காலை, திருவாரூர் நகராட்சிக்கு புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நகர்மன்றத் தலைவர் திரு. வி. ரவிச்சந்திரன் அவர்கள் ஆய்வுப்பணிகளை மேற்கொண்டார்.
கொடிக்கால்பாளையத்தில் நடைபெற்றுவரும் சிமெண்ட் சாலைப் பணிகள், இப்பகுதியில் கால்வாய்கள், மழைநீர் வடிகால்கள், சாக்கடை வசதி, சேர்ந்திருக்கும் குப்பைகளை அகற்றுவது ஆகியன பற்றிய ஆய்வுகள் நடைப்பெற்றது. இவருடன் 7-வார்டு உறுப்பினர் ஐ. முகம்மது கலிபுல்லா, 8-வது வார்டு உறுப்பினர் எம். ஜாகிர் உசேன் மற்றும் த.மு.மு.க. மாவட்டத் தலைவர் எம். முஜிபுர்ரஹ்மான், ம.ம.க. நகர செயலாளர் காதர் ஆகியோர் உடன் சென்றனர்.
பாதிவேலை முடிந்த நிலையில் கொடிக்கால்பாளையம் மேலத்தெரு
நகர்மன்றத் தலைவருடன் ம.ம.க. திருவாரூர் நகர செயலாளர் காதர் அவர்கள்
நகர்மன்றத் தலைவருடன் த.மு.மு.க. திருவாரூர் மாவட்டத் தலைவர் எம். முஜிபுர்ரஹ்மான் அவர்கள்
சிமெண்ட் சாலைப் போடும் பணி இன்னும் தொடங்கப்படாமல் இருக்கும் கொடிக்கால்பாளையம் நடுத்தெருவின் சீரழிந்த நிலைமை.
நகர்மன்றத் தலைவர் திரு. வி. ரவிச்சந்திரனுடன் (இடமிருந்து 2-வது) 7 மற்றும் 8-வது வார்டு நகர்மன்ற உறுப்பினர்கள் ஐ. கலிபுல்லா (இடது) மற்றும் எம். ஜாகிர் உசேன் (வலது புறம்)
ம.ம.க. நகரச் செயலாளர் காதர் அவர்களின் படங்கள் மற்றும் குறிப்புகளுடன் ர் நகர்மன்றத் தலைவருடன் 8-வது வார்டு நகர்மன்ற உறுப்ர் எம். ஜாகிர் உசேன்.
No comments:
Post a Comment